Thubam Podi

Agasthiar Thuba podi smoke from burnt benzoin resin when inhaled, gets into our nostrils and then to the brain to stimulate the nervous center thereby having a calming effect. It also acts as a sedative and hence believed to relieve anxiety and tension. You can imagine why it was widely used in big religious gatherings. Babies were also made to inhale its steam in order for them to have a sound sleep.

How to use?

ஏன் தூபம் காட்ட வேண்டும்?

நம் முன்னோர்கள் எதைச் செய்தாலும் அதில் ஒரு முக்கிய காரணம் இருக்கும் என்பதை நாம் தற்போது உணர்ந்து வருகின்றோம். அதன் அடிப்படையில் தூபம் போடுவது என்பது வீட்டில் வெறும் வாசனைக்காக மட்டும் இல்லை. அதன் பின்னர் பல நன்மைகள் அடங்கியுள்ளது. அகஸ்தியர் தூபம் என்பது வெறும் நறுமண புகை கிடையாது. இதனை வீட்டில் போடுவதால் ஒரு ஹோமம் செய்ததற்குரிய பலன் கிடைக்கும். தூபமிடும் போதும் வீட்டில் இறைவனின் அருள் நிலைத்து நிறைந்திருக்கும்.

கடை மட்டும் தொழில் நிலையங்களில் உபயோக படுத்த வியாபாரம் பெருகும், எதிரிகள் தொல்லை விலகும். வீட்டில் நல்ல சக்திகள் நிலை பெரும், வீண் சண்டை, அமைதி இன்மை ,தூக்கமின்மை போன்றவை அகலும். நோய் தொல்லை நீங்கும் ,எந்த விஷ கிருமிகள் மற்றும் விஷ ஜந்துக்கள் வீட்டில் தங்காது.

பொதுவாக  தூபம் போடுவதால், வீடு மட்டும் கடைகளில் உள்ள அனைத்து இடங்களில் உள்ள கெட்ட காற்றை அகற்றும் மேலும் விஷ ஜந்துக்களை அண்ட விடாமல் வெளியேற்றும். எதிர்மறை எண்ணங்களை குறைக்கும்.

அகஸ்தியர் தூபத்துடன் எதை சேர்த்தால், என்னென்ன நன்மை கிடைக்கும்?

 

  • அகஸ்தியர் தூபத்துடன் வெட்டிவேரை போட்டு தூபமிட்டால் நாம் நினைத்த காரியம் வெற்றி அடையும்.
  • வேப்பிலையை அகஸ்தியர் தூபத்துடன் போட்டு தூபமிட்டால் பல நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம்.
  • அகஸ்தியர் தூபத்துடன் வெண்கடுகை போட்டு தூபமிடுவதால் எதிரிகளும், பகைமையும் விலகும்.
  • வெண்குங்கிலிய பொடியை அகஸ்தியர் தூபத்துடன் சேர்த்து தூபமிடுவதால் வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் வெளியேறும்.
  • ஜவ்வாது போட்டு அகஸ்தியர் தூபத்துடன் தூபமிட்டால் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும்.
  • வேப்பம்பட்டையை அகஸ்தியர் தூபத்துடன் போட்டு தூபமிடுவதால் பில்லி. சூனியம், ஏவல் உள்ளிட்ட துஷ்ட சக்திகள் விலகும்.
  • துரோகிகள் நீங்க வேண்டுமெனில் அகஸ்தியர் தூபத்துடன் நாய் கடுகை சேர்த்து தூபமிடுவதால் நன்மை ஏற்படும்.
  • செயல்களில் வெற்றி உண்டாகவும், திருமண தடை நீங்க அகஸ்தியர் தூபத்துடன் காய்ந்த துளசியை போட்டு தூபமிடுவது சிறந்தது.
  • கரிசலாங்கண்ணி பொடியை  தூவி தூபமிட்டால் மகான்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
  • நன்னாரி வேர் பொடியை  சேர்த்து தூபமிட்டால் சகல ஐஸ்வர்யங்கள் உண்டாகும்.
  • அகஸ்தியர் தூபத்துடன் மருதாணி இலைப் பொடியை சேர்த்து தூபமிடும் போது மகாலட்சுமி அருள் கிடைக்கும்.
  • சந்தனத்தை சேர்த்து தூபமிட்டால் மகாலட்சுமி கடாட்சம் ஏற்படும்.
  • அறுகம்புல் பொடியை அகஸ்தியர் தூபத்துடன் சேர்த்து தூபமிடும் போது சகல தோஷங்களும் நீங்கும்.

அகஸ்தியர் தூபம் போடுவதால் மிக முக்கியமாக நமக்கும், நம் வீட்டிற்கும் ஏற்பட்டிருக்கும் கண் திருஷ்டி, நம் மீதான பிறரின் பொறாமை, திருஷ்டி உள்ளிட்டவை நீங்கும்.